ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றுதான்..! வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கிளார்க் நெகிழ்ச்சி!

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற முன்னாள் ஆஸி. வீரர் மைக்கேல் கிளார்க் பேசியதென்ன...

News image

மைக்கேல் கிளார்க். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :23 ஜனவரி 2025, 12:42 pm IST

உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64ஆவது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

பந்து தலைக்கு பட்டு இறந்துபோன பிலிப்ஸ் ஹக் கிளார்க்கின் உற்ற நண்பர். அவரது இறப்புக்குப் பிறகு அடுத்த நாள் இந்தியாவுடன் நடந்த டெஸ்ட்டில் சதமடித்து “எனது சிறிய சகோதரர்க்கு சமர்ப்பணம்” எனக் கூறி கிரிக்கெட் ரசிகர்கள் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.

2015 ஆஷஸ் தொடருக்கு பின்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து கிளார்க் பேசியதாவது:

வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றே

நான் சிறுவயதில் இருந்து பார்த்து வியந்த முன்னோடிகள், ரோல் மாடல்கள், அற்புதமான வீரர்கள் வரிசையில் நானும் இந்த விருதுபெறுவது மிகவும் கௌரவமாகக் கருதுகிறேன்.

ஓய்வு நம்மை என்னவெல்லாமோ செய்ய வைக்கிறது. கிரிக்கெட்டை பார்ப்பது மட்டுமே இப்போது முடிகிறது. நமது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி மக்கள் நம்மைப் புகழ்ந்து பேசுவது எல்லாம் எனக்கு 6 வயதிலேயே தொடங்கியது.

34 வயதில் ஓய்வை அறிவித்தேன். கிரிக்கெட் என்னுடைய வாழ்வாக இருந்தது. அது இன்னமும் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.

கிரிக்கெட் என்பது பொதுவாக நமது வாழ்க்கை போலவே இருக்கிறது. களத்துக்குச் சென்று சதமடிப்பது பின்னர் பேட்டினை உயர்த்துவது, பின்னர் ஃபீல்டிங்கில் சென்று 2ஆவது பந்திலேயே கேட்ச்சினை தவறவிடுவது என வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.