மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஒவ்வொரு சதமும் இறைவனால் தரப்படுகின்றன..! கவாஜாவின் வெற்றி ரகசியம்!

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்தது குறித்து ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.

News image

இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் உஸ்மான் கவாஜா. - படங்கள்: ஏபி

Updated On :30 ஜனவரி 2025, 12:34 pm IST

பிஜிடி தொடரில் கவாஜா சரியாக விளையாடாமல் பும்ராவிடம் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தார். மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்தது குறித்து ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.

வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நேற்று (ஜன.29) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தற்போது, ஆஸி. அணி 475 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 203, இங்கிலீஷ் 40 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவரும் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்து அசத்தியுள்ளார். மேலும். இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் ஆஸி. வீரர் என்ற சாதனையையும் கவாஜா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் போட்டிக்கு முன்னதாக உஸ்மான் கவாஜா தான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வெற்றியும் தோல்வியும் ஒன்றே

ஓவ்வொரு சதமும் எல்லாம்வல்ல இறைவனால் தரப்படுகின்றன. நான் அதைத்தான் நம்புகிறேன். நல்லதோ கெட்டதோ அதை ஒரேமாதிரியாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். எது நடந்தாலும் அதை நான் எனது நல்லதுக்காக நடப்பதாகவே கருதுகிறேன்.

எனது வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் பார்த்திருக்கிறேன். ’இது எவ்வளவு மோசமானதாக இருக்கிறது?’ என நான் நினைத்த பலவற்றுக்குப் பிறகும் பல நன்மைகள் நடந்திருக்கின்றன. அதனால், எனது வாழ்க்கையை வழிநடத்த கிரிக்கெட்டை அனுமதிப்பதில்லை.

எனக்கு அழகான குடும்பம் இருக்கிறது. ஆதரவாக மனைவி இருக்கிறார். கிரிக்கெட்டை தவிர்த்து எனக்கு வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும், நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். கடினமாக உழைக்கிறேன். ஆனால், உங்களுக்கே தெரியும் எல்லாவற்றையும் மேலே இருந்து ஒரு பெரிய நபர் கட்டுப்படுத்துகிறார். அதனால் சில கட்டத்துக்குப் பிறகு வாழ்க்கையை அவரிடமே விட்டுவிடுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.