இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சாகம்!

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று வெற்றி குறித்து...
Indian women's team celebrates victory...
வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய மகளிரணியினர்... படம்: பிசிசிஐ வுமன்.
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்ற சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய மகளிரணி 4-ஆவது டி20 போட்டியில் நேற்றிரவு விளையாடியது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 126/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா 22 ரன்கள் அடுத்தார்.

இந்தியாவின் சார்பில் ராதா யாதவ், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய இந்திய மகளிரணி 17 ஓவர்களில் 127/4 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 32 ரன்கள் எடுத்தார்.

5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 3-1 என வென்று தொடரை இந்திய மகளிரணி முதல்முறையாக வென்றுள்ளது.

கடைசி டி20 ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் ஜூலை 16-இல் தொடங்குகின்றன.

Radha Yadav won the Player of the Match award...
ராதா யாதவ் ஆட்ட நாயகி விருது...படம்: பிசிசிஐ

15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த ராதா யாதவ் ஆட்ட நாயகி விருது வென்றார்.

சொந்த மண்ணிலும் சரி இங்கிலாந்திலும் சரி இதற்கு முன்பாக இந்திய மகளிரணி இங்கிலாந்து மகளிருக்கு எதிராக விளையாடிய 6 டி20 தொடர்களில் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று வெற்றிக்கு இந்திய மகளிருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மகளிரணியினர் விடியோவை பிசிசிஐ வுமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Summary

The Indian women's team has created history by winning a T20 series against England women for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com