பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

40 வயதிலும் பந்தைப் பாய்ந்து பிடித்த டு பிளெஸ்ஸி: டிஎஸ்கே த்ரில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட்டில் நடந்தது குறித்து...

News image

பாய்ந்து பிடிக்கும் டு பிளெஸ்ஸி. உடன் நூர் அகமது. - படங்கள்: எக்ஸ் / எம்எல்சி

Updated On :14 ஜூன் 2025, 4:04 pm IST

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் இன்னிங்ஸும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டிஎஸ்கே 185 / 6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 44 பந்துகளில் 65 ரன்களும் சவேஜ் 34 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தார்கள்.

கேப்டன் டு பிளெஸ்சிஸ்18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விளையாடிய எம்ஐ நியூயார்க் இன்னிங்ஸ் 20 ஓவர்களில் 182/8 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதில் அதிகபட்சமாக மோனக் படேல் 62, மைக்கேல் பிரேஸ்வெல் 38 ரன்களும் எடுத்தார்கள்.

நிகோலஸ் பூரன் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவினார்.

இந்தப் போட்டியின்போது அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் அடித்த பந்தினை டு பிளெஸ்ஸி தாவிப் பிடிப்பார். இது போட்டியில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

40 வயதிலும் டு பிளெஸ்ஸி பிடித்த கேட்ச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.