அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

நாடுவிட்டு நாடு மாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது: நியூசி. பயிற்சியாளர்

துபை, பாகிஸ்தான் என மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருப்பதாக நியூசி. பயிற்சியாளர் கூறியுள்ளார்.

News image

கேரி ஸ்டெட் - படம்: ஐசிசி

Updated On :7 மார்ச் 2025, 3:04 pm IST

துபை, பாகிஸ்தான் என மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருப்பதாக நியூசி. தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பாரெனவும் கூறியுள்ளார்.

இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.9) சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடுவதால் கூடுதல் ஆதாயாம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூசி. பயிற்சியாளர் கூறியதாவது:

வருண் சக்கரவர்த்தி அச்சுறுத்தல்

வருண் சக்கரவர்த்தி தரமான பந்துவீச்சாளர். எங்களுக்கு எதிராக அவர் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அதனால், அவருக்கு எதிராக எப்படி ரன்களை குவிப்பது என எங்களது குழுவினர் தீவிரமாக சிந்தித்து வருகிறார்கள்.

சிலநாள்களுக்கு முன்பாக இந்தியாவுடன் விளையாடிய போட்டியில் இருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

துபையில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமென நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் இங்கு விளையாடுவது என்பது எங்களது கைகளில் இல்லை. அது ஐசிசியின் முடிவு. அதனால், அதுகுறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை.

நாங்கள் ஒருபோட்டி துபையில் விளையாடியுள்ளதால் அதிலிருந்து அனுபவங்களை விரைவாக கற்றுக்கொண்டு இருக்கிறோம்.

மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது

8 அணியிலிருந்து 2 அணியாக வந்துள்ளோம். எங்களது இடத்திலிருந்து பார்த்தால் இது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. மீதமிருப்பது ஒரு போட்டிதான். ஞாயிறு இந்தியாவை வீழ்த்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பாகிஸ்தான், துபை என மாறிமாறி சுற்றுவது பரப்பான வேலையில் சற்று தொல்லையாக இருக்கிறது. ஆனாலும் இதை சமாளிக்கும் வகையில் நியூசிலாந்து அணி தயாராக இருக்கிறது.

லாகூரிலிருந்து துபைக்கு வருவதற்கே ஒருநாள் சரியாக போய்விட்டது. ஆனால், சில நாள்கள் மீதமுள்ளன. அதில் ஓய்வெடுக்கவும் பயிற்சி செய்யவும் சரியாக இருக்கும்.

அதிகமாக பயிற்சி செய்வதைவிட மனதுக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.