அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா!

முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா.

News image
முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா.
Updated On :6 மே 2025, 7:03 am

DIN

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற்ற டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வென்ற அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு நாமன் விருதுகளில் வைர மோதிரம் பிசிசிஐ சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது.

முகமது சிராஜுக்கு தனது டி20 உலகக் கோப்பையில், இந்தியா விளையாடிய முதல் சில ஆட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். பரிசளிப்பு நிகழ்வின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கலந்துகொள்ளவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பையின் ரோஹித் சர்மா மற்றும் குஜராத் வீரர் முகமது சிராஜ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவரை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அணிவித்தார்.

இந்த சீசனில் சிராஜ் மற்றும் ரோஹித் இருவரும் தங்கள் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் போனது.

இருப்பினும், ஐபிஎல்லில் சிராஜ் இதுவரை 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரோஹித் சர்மா மெதுவாக விளையாடத் தொடங்கினாலும், இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 293 ரன்கள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.