
தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்.27ஆம் தேதி தொடங்கியது.
இதன் 5-ஆவது லீக் போட்டியில் இன்று (மே.7) கொழும்புவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 337/9 ரன்கள் குவித்தது.
இந்தியா சார்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 123 ரன்கள் அடித்து அசத்தினார். ஆட்ட நாயகி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 314/7 ரன்கள் எடுத்து தொல்வியுற்றது.
4 போட்டிகளில் 3-இல் வென்ற இந்திய அணியும் 3 போட்டிகளில் 2-இல் வென்ற இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகின.
தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மே.11ஆம் தேதி கொழும்பிவில் நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.