புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பந்துவீச்சிலும் ஷஃபாலி அசத்தல்: 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டம்!

News image

படம் | @ProteasWomenCSA

Updated On :2 நவம்பர் 2025, 5:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சேஸிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. இந்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஷஃபாலி வர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ள தென்னாப்பிரிக்கா கடைசி 25 ஓவர்களில் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து களத்தில் நங்கூரமிட்டுள்ளார். கைவசம் 6 விக்கெட்டுகள் இருப்பதால் வெற்றி வாய்ப்பு எந்தப் பக்கம் என்பது மதில் மேல் பூனைக் கதையாகியுள்ளது.

Summary

South Africa Women need 172 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.