ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அந்த பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒப்படைத்தார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரின்போது ருதுராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில், தோனி மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
ஆனால், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த சிஎஸ்கே அணி, புள்ளிப் பட்டியலில் டாப் 10-இல் கடைசி இடம் பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஆண்டாக சிஎஸ்கேவுக்கு அமைந்தது.
இதனிடையே, கடந்தாண்டு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என்று தகவல்கள் பரவிய நிலையில், 2026 ஆம் ஆண்டு உடல்நிலை பொறுத்து முடிவெடுப்பேன் என்று தோனி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி உறுதியாக விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Dhoni will play in IPL 2026! Chennai Super Kings CEO
இதையும் படிக்க : பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுகிறாரா? அஸ்வின் கூறுவதென்ன?

ப்ளே ஆஃப் செல்லுமா சிஎஸ்கே? என்ன செய்ய வேண்டும்?

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



