விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் ஒருவராக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

News image

படம் | ஐசிசி

Updated On :6 நவம்பர் 2025, 6:49 pm IST

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் ஒருவராக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீரர்/ வீராங்கனை விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்டனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஸ்மிருதி மந்தனா, தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 80 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்களும் எடுத்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான மிகவும் முக்கியமான போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 109 ரன்கள் எடுத்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் 45 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார்.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட்டுக்கும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோதிலும், தென்னாப்பிரிக்க அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.

இந்தியாவுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் 70 ரன்கள் எடுத்து அசத்திய லாரா வோல்வர்ட், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 169 ரன்கள் எடுத்து அசத்தினார் லாரா வோல்வர்ட். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அவர் சதம் விளாசி அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சதம் விளாசி அசத்தினார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இவர்கள் மூவரில் ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதினை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Summary

Indian team vice-captain Smriti Mandhana has been named as one of the contenders for the ICC Women's Player of the Year award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.