

உலகக் கோப்பையை வென்ற வீராங்கனை ரிச்சா கோஷுக்கு மேற்கு வங்க முதல்வர் டிஎஸ்பி பதவியை வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்திய மகளிரணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இந்த அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீராங்கனைக்கும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் பரிசுத் தொகையை அறிவித்து வருகிறார்கள்.
இதன்படி இந்திய மகளிரணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டிஎஸ்பி பட்டத்தை வழங்கியுள்ளார்.
மேலும், இதனுடன் ரூ.34 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்தப் பதவியை வழங்கும்போது முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, முன்னாள் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி உடன் இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.