திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது; தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் கங்குலி!

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

News image

இந்திய அணி வீரர்கள் - படம் | AP

Updated On :11 நவம்பர் 2025, 4:22 pm IST

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது.

சௌரவ் கங்குலி (கோப்புப் படம்)

சௌரவ் கங்குலி (கோப்புப் படம்)

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்காவை சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது. இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. இந்திய துணைக் கண்டத்தில் இந்திய அணி மிகவும் வலிமையான அணி. வெளிநாடுகளிலும் இந்திய அணி வலுவான அணியாக மாறியுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க அணியும் மிகவும் வலுவான அணி. அதனால், இந்த தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்றார்.

Summary

Former Indian captain Sourav Ganguly has warned South Africa that a Test series against India on home soil will never be easy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.