புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஸ்மிருதி மந்தனாவின் மணமகனும் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்மிருதி மந்தனாவின் மணமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி...

திருமணமாகவுள்ள பலாஷ் முச்சலுடன் ஸ்மிருதி மந்தனா - Photo: Instagram / Smiriti Mandhana

Published On :

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து, அவரது மணமகனும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் நேற்றுறு(நவ. 23) திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனா பண்ணை வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திருமணத்தை ஒத்திவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாஷ் முச்சலின் உடல்நிலை குறித்து அவரது தாயார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “ஸ்மிருதியைவிட அவரது தந்தையுடன் பலாஷ் மிகவும் நெருக்கமும் அன்பும் கொண்டவர். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன், அவர் குணமடையும்வரை திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பலாஷ்தான் முடிவெடுத்தார்.

தொடர்ந்து அழுததால் திடீரென பலாஷுக்கு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிரிப்ஸ் போடப்பட்டது. இசிஜி உள்ளிட்ட பிற சோதனைகளும் செய்யப்பட்டன. அவர் உடல்நிலைக்கு பிரச்னை இல்லை. ஆனால், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ஸ்மிருதி மந்தனாவின் தந்தை நிலை?

ஸ்மிருதி மந்தனாவின் தந்தை அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்ட தகவலில், ”திருமண ஏற்பாட்டால் உடல் அல்லது மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தை உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தற்போது அவர் நலமுடன் இருப்பதாக பலாஷின் தாயார் தெரிவித்துள்ளார்.

”திருமணத்துக்கு முந்தைய நாள் மிகவும் மகிழ்ச்சியுடன் நீண்ட நேரம் ஸ்மிருதியின் தந்தை நடனமாடிக் கொண்டிருந்தார். இன்ஸ்டாகிராமில்கூட பதிவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உடல் அசெளகரியம் ஏற்பட்டுள்ளது.

முதலில் அவர் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்” என்றார்.

Summary

Smriti Mandhana's fiancé also admitted to hospital!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.