இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

வேறு அணியில் விளையாட விருப்பமில்லை: ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!

அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு பெற்றது குறித்து...

News image

ஆண்ட்ரே ரஸல் - படம்: எக்ஸ் / கேகேஆர்.

Updated On :30 நவம்பர் 2025, 12:59 pm IST

அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மினி ஏலத்தில் அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருந்த வேளையில், அதையெல்லாம் உதறித்தள்ளும்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்த ஆண்ட்ரே ரஸல் இந்த சீசனுடன் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மினி ஏலத்தில் அவருக்கு அதிக தொகை கொடுத்து எடுக்க சிஎஸ்கே போன்ற அணிகள் காத்திருந்த வேளையில் அதிர்ச்சி அளிக்கும் முடிவை அறிவித்துள்ளார்.

கேகேஆர் அணியில் பவர் கோச் என்ற பதவியில் தொடர்வதாகவும் மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாட விருப்பமில்லை எனவும் உருக்கமாக விடியோ வெளியிட்டுள்ளார்.

2014- 2025 வரை கேகேஆர் அணியில் ரஸல் விளையாடியுள்ளார். இந்தக் கடினமான முடிவு குறித்து அவர் கூறியதாவது:

வேறு அணிகளில் விளையாட விருப்பமில்லை...

கேகேஅர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி. நான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். உலகின் மற்ற லீக்குகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

இன்ஸ்டாகிராம் உலகில் நாம் வாழ்கிறோம். என்னுடைய டைம்லைனில் நான் வேறு ஐபிஎல் அணிகளின் உடைகளைப் பார்க்கும்போது மிகவும் மோசமாக உணர்ந்தேன்.

எனக்கென ஒரு பாரம்பரியத்தை உண்டாக்க நினைக்கிறேன். உறக்கமில்லா பல இரவுகள் இருந்தன. கேகேஆர் அணியின் நிர்வாகிகள் உடன் பேசினேன். அவர்கள் என் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள்.

எனக்கு பவர் கோச் என்ற பதவியை வழங்கியுள்ளார்கள். அதுதான் நான். அதுதான் என்னை வரையறை செய்கிறது. பேட்டிங்கில் என்னுடைய அதிரடி பேட்டிங்கை பிரதிபலித்தது. தொடர்ந்து பயணிப்போம் என்றார்.

Summary

Action king Andre Russell has announced his retirement from the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.