இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மழை ஆடியதால் ஆஸி.-இலங்கை ஆட்டம் ரத்து!

பலத்த மழை எதிரொலியாக இலங்கை-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் கைவிடப்பட்டது.

News image
பலத்த மழையால் கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் மூடப்பட்டிருந்த பிட்ச்.
Updated On :4 அக்டோபர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

பலத்த மழை எதிரொலியாக இலங்கை-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் கைவிடப்பட்டது.

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கை தலைநகா் கொழும்புவிலும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான ஆட்டம் பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ஆட்டத்துக்கு தயாராக இருந்தனா்.

ஆனால் மழை பெய்யத் தொடங்கியதால் களப் பணியாளா்கள் பிட்சை தாா்ப்பாய் கொண்டு மூடினா். டாஸ் போட வாய்ப்பு கிட்டாத நிலையில், தொடா் மழையால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவா்கள் அறிவித்தனா்.

இந்திய-பாக் ஆட்டத்துக்கும் சிக்கல்?

தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்தை, ஆஸ்திரேலியாவும், இலங்கையை இந்தியாவும் வென்றிருந்தன. ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் இந்தியா-பாக். அணிகள் ஆட்டம் நடைபெறவுள்ளது. எனினும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்திய-பாக். ஆட்டமும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.