காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யாரும் சாதகமாக செயல்பட்டு ஷுப்மன் கில் கேப்டனாகவில்லை: கௌதம் கம்பீர்

ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என யாரும் எந்தவொரு சாதகமும் செய்யவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

News image
கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்- படம் | ஐசிசி
Updated On :14 அக்டோபர் 2025, 10:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என யாரும் எந்தவொரு சாதகமும் செய்யவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். வருகிற அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படவுள்ளார். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை மனதில் வைத்து ஷுப்மன் கில் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என யாரும் எந்தவொரு சாதகமும் செய்யவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் கேப்டனாக அவரது முடிவுகளை அவரே எடுக்கிறார். அவரை அவராக செயல்பட விடுவதே அவர் சிறப்பாக செயல்படுவதன் ரகசியம். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலோ அல்லது ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலோ யாரும் ஷுப்மன் கில்லுக்கு எந்த ஒரு சாதகமும் செய்யவில்லை என நினைக்கிறேன்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு அவர் மிகவும் தகுதியானவர் என நினைக்கிறேன். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். ஷுப்மன் கில்லுக்கு வைக்கப்பட்ட மிகவும் கடினமான தேர்வில் அவர் ஏற்கனவே தேர்ச்சி பெற்றுவிட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி ஷுப்மன் கில் ஏற்கனவே தேர்ச்சியடைந்துவிட்டார் என்றார்.

summary

India head coach Gautam Gambhir has said that no one has done any favours to appoint Shubman Gill as captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.