எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

முதல்முறையாக அடுத்தடுத்து டக்-அவுட்!! ஓய்வு பெறுகிறாரா? கோலி செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒருநாள் போட்டியிலிருந்து விராட் கோலி ஓய்வுபெறப் போவதாக பரவும் செய்தி பற்றி...

News image

விராட் கோலி - Photo : JioHotstar

Updated On :23 அக்டோபர் 2025, 12:09 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல்முறையாக தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ளார்.

ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு திடலில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் கில் களமிறங்கினர். கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.

அடிலெய்டு திடல் விராட் கோலியின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர் ஒருவர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் மட்டும் அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து 975 ரன்கள் குவித்துள்ளதே இதற்கு காரணம்.

8 மாத இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பெர்த் ஒருநாள் போட்டியில் கடந்த 19 ஆம் தேதி களமிறங்கிய கோலி, டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில், அவரின் கோட்டையான அடிலெய்டு திடலில் இன்று மீள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் திடலுக்குள் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், 4 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்த கோலி, சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில், எல்பிடபள்யூ முறையில் டக்-அவுட்டானார்.

ஓய்வுபெறுகிறாரா கோலி?

டக்-அவுட் ஆனதைவிட அதன்பிறகு கோலியின் செயல்கள்தான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அவுட்டான பிறகு பெவிலியன் திரும்பிய கோலிக்கு ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர். இதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக தனது வலது கையை உயர்ந்தி அமைதியாக அசைத்துவிட்டுச் சென்றார் கோலி.

கோலியின் இந்தச் செயல் இயல்பானதா? அல்லது ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? என்ற விவாதம் இணையத்தில் தொடங்கியுள்ளது.

#KohliRetirement, #ViratKohli போன்ற ஹேஷ் டேக்குகள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.