ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ரஷித் கான்!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார்.

News image

ரஷித் கான் - படம் | ஐசிசி (எக்ஸ்)

Updated On :2 செப்டம்பர் 2025, 6:34 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.

வரலாறு படைத்த ரஷித் கான்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

நேற்றையப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரஷித் கான் படைத்தார். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 165 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சௌதி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Afghanistan's Rashid Khan has created history by taking the most wickets in T20 Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.