காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

மார்னஸ் லபுஷேனின் சிறப்பான ஆட்டம் குறித்து...

Marnus Labuschagne

மார்னஸ் லபுஷேன். - படம்: இன்ஸ்டா / மார்னஸ் லபுஷேன்.

Published On :

மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது.

கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்கெட் கிளப் நடத்தும் டி20 போட்டிகள் 2022 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தொடரின் 2025 சீசனில் இறுதிப் போட்டியில் வேல்லி அணியும் ரெட்லேண்ட் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த ரெட்லேன்ட் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜிம்மி பியர்சன் 102 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய வேல்லி அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்த அணியில் மேக்ஸ் பிரயண்ட் 76 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் மார்னஸ் லபுஷேன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். மேலும், 3 கேட்ச்களைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

பேட்டரான மார்னஸ் லபுஷேன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரில் ஒரு போட்டியில் லபுஷேன் சதம் அடித்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Marnus Labuschagne's brilliant bowling helped his Redlands team win the final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.