ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்தார்.

smiriti mandhana

ஸ்மிருதி மந்தனா - படம் | ஐசிசி

Published On :

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்தார்.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 16) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 63 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் எடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட்டை பேட்டிங் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்தார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டும் ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் முதலிடம் பிடித்திருந்தார்.

இந்திய அணியின் மற்ற வீராங்கனைகளான பிரதீகா ராவல் நான்கு இடங்கள் முன்னேறி 42-வது இடமும், ஹர்லீன் தியோல் ஐந்து இடங்கள் முன்னேறி 43-வது இடமும் பிடித்தனர்.

Summary

Indian player Smriti Mandhana regains top spot in ICC ODI rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.