25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசிய முகமது நபி..! 40 வயதிலும் அசத்தல்!

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியின் பேட்டிங் குறித்து...

Afghan player Mohammad Nabi

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி - படம்: எக்ஸ் / ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்.

Published On :19 செப்டம்பர் 2025, 11:41 am IST

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ( 40 வயது) இலங்கை வீரர் துனித் வெல்லாலகே (22 வயது) ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தை மாற்றிய முகமது நபியின் இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகள் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 18 ஓவரில் 120/7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

கடைசி இரண்டு ஓவர்களில் முகமது நபி அசத்தலாக விளையாடினார். 19-ஆவது ஓவரில் 17 ரன்களும் 20-ஆவது ஓவரில் 32 ரன்களும் எடுத்தார்.

கடைசி ஓவரை வீசிய வெல்லாலகே ஓவரில் முகமது நபி 6, 6, 6, நோ பால் , 6, 6 அடித்தார். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் 40 வயதான முகமது நபியின் இந்தப் போராட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கன் வென்றிருந்தால், முகமது நபி ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருப்பார்.

Summary

Afghanistan's Mohammad Nabi struck five sixes in an over against Sri Lankan Dunith Wellalage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.