பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஓமனுக்கு எதிராக பேட்டிங் செய்யாத சூர்யகுமார் யாதவ்; ஆதரவளிக்கும் முன்னாள் கேப்டன்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யாதது குறித்து...

News image

சூர்யகுமார் யாதவ் - படம் | பிடிஐ

Updated On :20 செப்டம்பர் 2025, 3:00 pm IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யவில்லை.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்தார். வழக்கமாக முன்வரிசையில் களமிறங்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 விக்கெட்டுகள் ஆகியும் நேற்றையப் போட்டியில் பேட்டிங் செய்ய வராதது அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

முன்னாள் கேப்டன் ஆதரவு

ஓமனுக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் ஆர்டரில் களமிறங்காமல் பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு விளையாட வாய்ப்பளித்த கேப்டன் சூர்யகுமார் யாதவின் முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூர்யகுமார் யாதவ் ஒரு ஓவர் பேட்டிங் செய்திருந்தாலும், அவர் சில ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள் அடித்திருப்பார். ஆனால், அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்த விதத்திலிருந்து அவருக்கு ஓமனுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் பயிற்சி தேவையில்லை என்பது தெரிந்திருக்கும். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால், குல்தீப் யாதவின் பேட்டிங் அணிக்கு உதவியாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாக அவரை முன்கூட்டியே களமிறக்கியிருக்கலாம்.

சூர்யகுமார் யாதவ் வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவரே பந்துவீச்சில் ஈடுபட்டார். ரிங்கு சிங்குக்கும் பந்துவீச வாய்ப்பளித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அவர் மிகவும் புதுமையாக யோசிக்கக் கூடியவர். அதன் காரணமாகவே, அவர் பேட்டிங்குக்கு வரமால் குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீங் சிங்கை முன்கூட்டியே களமிறக்கியிருக்கிறார் என்றார்.

துபையில் நாளை (செப்டம்பர் 21) நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding Indian team captain Suryakumar Yadav not batting in the match against Oman in the Asia Cup cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.