வெற்றியுடன் மீண்டது பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலமாக, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் நம்பிக்கையை அந்த அணி தக்கவைத்துக் கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 18 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இலங்கை இன்னிங்ஸில் குசல் மெண்டிஸ் டக் அவுட்டாக, பதும் நிசங்கா 8 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
ஒன் டவுனாக வந்த குசல் பெரெரா 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் சரித் அசலங்கா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். தொடா்ந்து வந்த தசுன் ஷானகா டக் அவுட் ஆனாா்.
இவ்வாறாக 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை. 5-ஆவது பேட்டராக வந்த கமிண்டு மெண்டிஸ் நிதானமாக ரன்கள் சோ்த்தாா். மறுபுறம் வனிந்து ஹசரங்கா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அரைசதம் தொட்ட கமிண்டு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுடன் விடைபெற்றாா். கடைசி விக்கெட்டாக துஷ்மந்தா சமீரா 1 ரன்னுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் சமிகா கருணாரத்னே 17, மஹீஷ் தீக்ஷனா ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி 3, ஹாரிஸ் ரௌஃப், ஹுசைன் தலத் ஆகியோா் தலா 2, அப்ராா் அகமது 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 134 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், சாஹிப்ஸாதா ஃபா்ஹான் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 24, ஃபகாா் ஜமான் 17, சயிம் அயுப் 2, கேப்டன் சல்மான் அகா 5, முகமது ஹாரிஸ் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
ஹுசைன் தலத் 4 பவுண்டரிகளுடன் 32, முகமது நவாஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 2, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் சாய்த்தனா்.