மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

shreyas iyer

ஷ்ரேயாஸ் ஐயர் (கோப்புப் படம்)

Published On :

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்று (செப்டம்பர் 25) அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டபோது, மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும், இந்தியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐருக்கு பிரிட்டனில் முதுகுப் பதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவருக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முழுவதுமாக குணமடைய நேரம் தேவைப்படுகிறது. ஓய்வு வேண்டுமென அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவர் இரானி கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team's Shreyas Iyer has requested the BCCI to grant him a 6-month break from Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.