யு19 கிரிக்கெட்: இந்தியா அபாரம்

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 19) ஒருநாள் கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
Published on
Updated on
1 min read

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 19) ஒருநாள் கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை, இந்தியா 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இந்த 3-ஆவது ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 28.3 ஓவர்களில் 113 ரன்களுக்கே சுருண்டது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 86, ராகுல் குமார் 62 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலிய பெளலிங்கில் வில் பைரோம், கேசி பார்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அலெக்ஸ் டர்னர் 32, டாம் ஹோகன் 28 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இந்திய பெளலர்களில் கிலான் படேல் 4, உத்தவ் மோகன் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com