இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி இந்திய வீரர் ராகுல் சஹார், 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே மற்றும் ஹாம்ஃப்ஷைர் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சர்ரே 147 ரன்களும், ஹாம்ஃப்ஷைர் 248 ரன்களும் எடுத்தனர். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் முதல் சர்ரே அணி 281 ரன்களில் ஆல்-அவுட்டானது.
அதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சர்ரே அணி, ஹாம்ஃப்ஷைர் அணியின் பந்து வீச்சத்தாக்குப் பிடிக்க முடியாமல் 160 ரன்களில் சுருண்டது. இதனால், சர்ரே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சர்ரே அணி வீரர் ராகுல் சஹார் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
Rahul Chahar announced himself in style ð¥
— Cricketopia (@CricketopiaCom) September 28, 2025
Figures of 24-7-51-8 on debut for Surrey in the County Championship, breaking a record that stood since 1859. He surpassed William Mudleâs 7/61 to register the best debut figures in Surrey history.
pic.twitter.com/0VErqYF2NS
கவுன்டி கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமான ராகுல் சஹார், தன்னுடைய முதல் போட்டியிலேயே 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, சர்ரே அணிக்காக விளையாடிய வில்லியன் முல்டே 1859 ஆம் ஆண்டு ஹாம்ஃப்ஷைருக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ராகுல் சஹார் முடியடித்துள்ளார்.
ஐபில் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், பஞ்சாப் அணிக்காவும் விளையாடியுள்ள ராகுல் சஹார், இந்திய அணிக்காகவும் சர்வதேசப் போட்டிகளில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 ஆம் ஆண்டு வரை ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும், 6 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Rahul Chahar breaks 166-year-old record with eight-wicket haul on Surrey debut
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










