ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சனின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடிக்கவுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஆர்ச்சர் இதுவரை 6 சீசன்களில் விளையாடியுள்ளார். அதில் 5 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், ஒரு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிப்பாரா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் அந்த அணிக்காக 84 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமை அவரையேச் சேரும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஷேன் வாட்சனுக்கு அடுத்தபடியாக, யுஸ்வேந்திர சஹால் (66 விக்கெட்டுகள்), சித்தார்த் திரிவேதி (65 விக்கெட்டுகள்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (65 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் நிலையில், ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிப்பார். இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 53 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ச்சர் 65 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பட்சத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
Summary
Fast bowler Jofra Archer is set to break the record held by former Australian player Shane Watson.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் சாம் கரண் விளையாடாதது ஏன்? ஏமாற்றத்தின் உச்சத்தில் சங்ககாரா!

ராஜஸ்தான் தோல்வியால் அழுகை: ரசிகர்களின் இதயங்களை வென்ற சூர்யவன்ஷி!
சூர்யவன்ஷி, ஆர்ச்சர் சவாலைச் சமாளிக்குமா குஜராத்?

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




