டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இன்று (பிப்ரவரி 7) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் நாளான இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
கொழும்புவில் நாளை (பிப்ரவரி 8) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
ஈஷன் மலிங்கா விலகல்
தனது முதல் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக விலகியுள்ள அவருக்குப் பதிலாக பிரமோத் மதுஷன் மாற்று வீரராக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிதவேகப் பந்துவீச்சாளரான பிரமோத் மதுஷன் இலங்கை அணிக்காக இதுவரை 13 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, ஈஷன் மலிங்காவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Sri Lankan fast bowler Eshan Malinga has withdrawn from the T20 World Cup tournament due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




