புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆப்கன் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி..! நியூசிலாந்து சாதனை வெற்றி!

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் அபார வெற்றி குறித்து...

News image

நியூசிலாந்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆப்கன் கேப்டன் ரஷித் கான். - படம்: ஏபி

Updated On :8 பிப்ரவரி 2026, 2:43 pm IST

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி தனது அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் 4-ஆவது போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக, குல்பதீன் 63 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய, நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 183/5 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கன் சார்பில் முஜீப் 2, ரஷித், நபி, ஓமர்சாய் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

நியூசிலாந்து அணியில் டிம் சைஃபர்ட் 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதுவரை 176 ரன்களுக்கு அதிகமாக எடுத்து தோல்வியே காணாத ஆப்கானிஸ்தான் முதல்முறையாக தோல்வியுற்றுள்ளது.

இதுமட்டுமில்லாமல், டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி தனது அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து வீரர் டிம் சைஃப்ர்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து 2 (+1.162 ) புள்ளிகளுடன் குரூப் டியில் முதலிடத்தில் இருக்கிறது.

Summary

An end to Afghan dominance! New Zealand achieves a historic victory in T20 world cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.