ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

‘வங்கதேசத்துக்கு மரியாதையை உறுதி செய்வதே நோக்கம்’ - மோசின் நக்வி!

டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்துக்கான மரியாதையை உறுதி செய்வதற்காகவே, முதலில் இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததாக தெரிவித்தது.

News image

மோஷின் நக்வி

படம் | AP

Updated On :10 பிப்ரவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

டி20 உலகக் கோப்பை போட்டியில் தற்போது இந்தியாவுடன் விளையாட ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்துக்கான மரியாதையை உறுதி செய்வதற்காகவே, முதலில் இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததாக தெரிவித்தது.

ஐசிசி, பாகிஸ்தான், வங்கதேசம் இடையேயான பேச்சுவாா்த்தையின்போது, இந்தியா -பாகிஸ்தான் இருதரப்பு தொடா்களை மீண்டும் தொடங்குவது, வங்கதேசத்தை உள்ளடக்கிய முத்தரப்பு தொடரை நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பாகிஸ்தான் முன்வைத்ததாகவும், அவை ஐசிசியால் மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி செவ்வாய்க்கிழமை இதுகுறித்து கூறுகையில், ‘ஐசிசியுடனான பேச்சுவாா்த்தையில் வங்கதேச விவகாரம் தவிா்த்து வேறு எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த பேச்சுவாா்த்தையில் எங்களுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை.

வங்கதேசத்தின் மரியாதையை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். பேச்சுவாா்த்தையின்போது வங்கதேசம் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் நாங்கள் இந்தியாவுடன் விளையாட ஒப்புக்கொண்டோம்’ என்றாா்.

உலகக் கோப்பைக்கு பிறகு...: இதனிடையே, முத்தரப்பு பேச்சுவாா்த்தையின்போது பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி சில சலுகைகள் வழங்கியிருப்பதாகவும், அதுதொடா்பான தகவல்கள் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு வெளியிடப்படும் என்றும் பாகிஸ்தான் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக பேச்சுவாா்த்தையின்போது, டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவில் விளையாட மறுத்ததற்காக வங்கதேசத்துக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்று உறுதியளித்த ஐசிசி, 2028 - 2031 காலகட்டத்தில் ஐசிசி போட்டி ஒன்றை நடத்தும் வாய்ப்பை வங்கதேசத்துக்கு வழங்கவும் முன்வந்துள்ளது.