சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கூடுதலாக 10% உழைப்போம்..! ஆட்ட நாயகன் விருது வென்ற ரூதர்ஃபோர்டு!

ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் பேசியிருப்பதாவது...

News image
போட்டிக்குப் பிறகு ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு. - படம்: ஏபி
Updated On :12 பிப்ரவரி 2026, 7:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச, முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 196/6 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 19 ஓவர்களில் 166-க்கு ஆல் அவுட்டானது.

வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரூதர்ஃபோர்டு 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்ற ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு பேசியிருப்பதாவது:

முதலில், இதுபோல மிகப்பெரிய போட்டியில் விளையாட வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி. காயம்பட்ட எனது விரல்கள் நன்றாக இருக்கின்றன. அடுத்த போட்டிக்குள் இன்னும் குணமாகிவிடுமென நினைக்கிறேன்.

ஆதில் ரஷித் மிகவும் சவாலான வீரர் என்று தெரியும். அணியின் கலந்தாலோசனையிலும் இவர்தான் மிகவும் கடினமான வீரர் என்று பேசினோம்.

எனக்கு என்ன முக்கியம் என்றால், அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டுமென நினைத்தேன்.

இன்னும் கூடுதலாக 10 சதவிகிதம் உழைப்போம்

உலகக் கோப்பையில் விளையாட அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. என்னைப் பொருத்தவரை சூழ்நிலையைப் புரிந்து, எனது பாணியைக் கடைப்பிடிப்பேன். அது சரியாக நடந்தால், எப்போதும் கடைசியில் ரன்களைக் குவிப்பேன்.

தெளிவான எண்ணத்துடன் ரன்களைக் குவிக்க வேண்டுமென விளையாடுகிறேன். 10 ரன்கள் குறைவாக இருக்கிறோம் என நினைத்தேன். ஏனெனில், இங்கிலாந்து மிகவும் அதிரடியான அணி என்று எங்களுக்குத் தெரியும்.

இருந்தும் எங்கள் வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

கயானா என்ற நாடும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. அடுத்தடுத்த போட்டிகளில் மற்றவர்கள் முன்வந்து ஆட்டத்தை வெல்ல உதவுவார்கள் என நம்புகிறேன்.

மிகப் பெரிய தொடர்களில் நல்ல உத்வேகத்தைக் கொண்டு வர வேண்டும். இப்பொது இருக்கும் இந்த உத்வேகத்தை அப்படியே நாங்கள் தொடர வேண்டும். நாங்கள், போகப் போக முன்னேற முயற்சிப்போம். இன்னும் கூடுதலாக 10 சதவிகித உழைப்பை அளிக்க முயற்சிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.