எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கவில்லை!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டிக்கு டாஸ் சுண்டப்பட்டபோது, இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

படம் | AP

Published On :15 பிப்ரவரி 2026, 7:35 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டிக்கு டாஸ் சுண்டப்பட்டபோது, இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி சில நாள்களுக்கு முன்பு இருந்தது. பின்னர், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி நடைபெறுவது உறுதியானது.

இருப்பினும், இரண்டு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 14) பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கை குலுக்குவது டாஸ் சுண்டும்போது தெரிய வரும் காத்திருங்கள் என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், டாஸின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

Summary

When the toss was thrown for today's match in the T20 World Cup, the captains of India and Pakistan did not shake hands.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.