பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அபிஷேக் சர்மா மீண்டும் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளார். அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
Pakistan won the toss and elected to bowl against India in the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

