

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான முதல் அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியின் தோல்வியுற்றதால் நேபாளம் அணி, அடுத்த சுற்றுக்கு தேர்வாகாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.
மும்பை வாக்னடேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுக்க, மே.இ.தீ. அணி 15.2 ஓவர்களில் 134/1 ரன்கள் எடுத்து வென்றது.
பந்து வீச்சில் அசத்திய ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. 3 போட்டிகளிலும் தொல்வியுற்ற நேபாளம் அணி வெளியேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.