தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; இலங்கைக்கு 182 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

News image
- படம் | AP
Updated On :16 பிப்ரவரி 2026, 3:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்!

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 104 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் அதிரடியாக 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், களமிறங்கிய கேமரூன் கிரீன் 3 ரன்கள், டிம் டேவிட் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியில் விளையாடும் கேப்டன் மிட்செல் மார்ஷ், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின் களமிறங்கியவர்களில் ஜோஷ் இங்லிஷ் மற்றும் மேக்ஸ்வெல்லைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜோஷ் இங்லிஷ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் துஷான் ஹேமந்தா 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.