ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அன்புடன் சென்னை.. ஆப்கனில் விளையாடியது போன்ற உணர்வு.. ரஷீத்கான் நெகிழ்ச்சி!

சொந்த மண்ணிலேயே விளையாடியது போன்ற உணர்வைக் கொடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image
ஆப்கானிஸ்தான் அணியினர்.- படம் : ஏபி.v
Updated On :20 பிப்ரவரி 2026, 12:01 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ூசென்னை, தில்லி, அகமதாபாத் உள்ளிட்ட திடலில் கிடைத்த மிகப் பெரிய ஆதரவு சொந்த மண்ணிலேயே விளையாடியது போன்ற உணர்வைக் கொடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் சூப்பர் -8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி இந்தத் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அட்டக்காசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டு சூப்பர் ஓவர்களுடன் நூலிழையில் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பைத் தவறவிட்டது.

இருப்பினும், சென்னை, தில்லி, அகமதாபாத் என இந்தியாவில் நடைபெற்ற அனைத்துத் திடல்களிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் கூறுகையில், “டி20 உலக கோப்பை தொடரின்போது இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொடுத்த அன்பு, எப்போதும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்.

அகமதாபாத், சென்னை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமானோர் எங்களுக்கு அமோக ஆதரவு அளித்தனர். இது சொந்த மண்ணான ஆப்கானிஸ்தானில் விளையாடியது போன்ற உணர்வை கொடுத்தது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.