

ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 20ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
இதுவரை அதிகமான முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்களில் இரண்டாமிடத்தில் உள்ள சிக்கந்தர் ராஸா தனது சாதனையை மேலும் நீட்டித்துள்ளார்.
ஜிம்பாப்வே டி20 அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தலைமையில் அந்த அணி இந்த டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தியுள்ளது.
லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற ஜிம்பாப்வே அணி குரூப் 1 பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணி இருக்கின்றன.
கடைசியாக இலங்கையுடன் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் சிக்கந்தர் ராஸா 45 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்
1. விரந்தீப் சிங் - 22 (மலேசியா)
2. சிக்கந்தர் ராஸா - 20 (ஜிம்பாப்வே)
3. சூர்யகுமார் யாதவ் - 17 (இந்தியா)
4. விராட் கோலி - 16 (இந்தியா)
5. சமி சோஹலி - 14 (மலாவி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.