டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் அகமதாபாதில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த அணி முதலில் பேட் செய்கிறது.
தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ யான்சென் மீண்டும் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
Summary
South Africa won the toss and elected to bat against India in the Super 8 round of the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










