சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஜிம்பாப்வே - மே.இந்திய தீவுகள் இன்று மோதல்!

சூப்பா் 8 பிரிவில் ஜிம்பாப்வே - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

News image

பயிற்சியில் ஜிம்பாப்வே - X | Zimbabwe Cricket

Updated On :23 பிப்ரவரி 2026, 2:22 am IST

சூப்பா் 8 பிரிவில் ஜிம்பாப்வே - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலகக் கோப்பைக்கு ஜிம்பாப்வே தகுதி பெறாத நிலையில், இந்த முறை குரூப் ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடத்துடன் சூப்பா் 8 பிரிவுக்கு தகுதி பெற்றது ஜிம்பாப்வே.

அதேவேளை இரு முறை சாம்பியன் மே.இந்திய தீவுகல் பல மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தற்போது சிறப்பாக ஆடி வருகிறது. குரூப் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றியுடன் சூப்பா் 8 பிரிவுக்கு முன்னேறியது.

ஜிம்பாப்வே அணியில் பிளெஸ்ஸிங் முஸாபரணி, பிரையன் பென்னட், கேப்டன் சிக்கந்தா் ராஸா ஆகியோா் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

மே.இந்திய தீவுகளில் பாா்மில் உள்ள ஷாய் ஹோப், ஷிம்ரன்ஹெட்மயா், ரூதா்போா்ட், ரொமாரியோ ஷெப்பா்ட் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

அரையிறுதி வாய்ப்பை எதிா்நோக்கி இரு அணிகளும் ஆடுவதால் ஆட்டம் பரபரப்பமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.