பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டதாக நடுவர் ஸ்டீவ் பக்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

Updated On :24 பிப்ரவரி 2026, 5:33 pm IST

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டதாக நடுவர் ஸ்டீவ் பக்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக செயல்பட்டு வந்த ஸ்டீவ் பக்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக மிகவும் மோசமான முடிவை அளித்ததால், ஸ்டீவ் பக்னர் பிரபலமாக அறியப்பட்டவர்.

கடந்த 2003-04 ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு அப்போது கள நடுவராக செயல்பட்ட ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுத்த முடிவு மிகப் பெரிய சர்ச்சையானது.

லெக் பிஃபோர் விக்கெட் முறையில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததார். ஆனால், பந்து ஸ்டம்புக்கு மிகவும் மேலே செல்லும். அப்போது வர்ணணையில் ஈடுபட்டிருந்த வர்ணணையாளரும் மிகவும் மோசமான முடிவு என இதனை விமர்சித்திருப்பார்.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் முடிவை வழங்கிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ள ஸ்டீவ் பக்னர், அதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் நடுவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நேர்காணலில் அவர் பேசியதாவது: சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டேன். அந்த விஷயத்தை மக்கள் இன்றுவரை பேசுகிறார்கள். நான் எதற்காக அவுட் கொடுத்தேன்? அவர் உண்மையில் அவுட்டா என்பது தெரியாமல் தவறுதலாக நடந்த விஷயம் அது. வாழ்க்கையில் தவறுகள் நடக்கும். நான் என்னுடைய தவறை ஒப்புக் கொண்டேன். என்னுடைய தவறான முடிவுக்காக வருந்துகிறேன் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றிலும் ஸ்டீவ் பக்னர் சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்திருப்பார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு கலந்துரையாடல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கரிடம் உங்களுக்கும் நடுவர் ஸ்டீவ் பக்னருக்கும் இடையிலான உறவு எத்தகையது எனக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அதற்கு பதிலளித்த டெண்டுல்கர், நான் பேட்டிங் செய்யும்போது, ஸ்டீவ் பக்னருக்கு குத்துச் சண்டையில் உபயோகிக்கும் கையுறையை கொடுங்கள். அப்படி செய்தால், அவரால், விரல்களை உயர்த்த முடியாது என வேடிக்கையாக பதிலளித்திருப்பார்.

79 வயதாகும் ஸ்டீவ் பக்னர் 1989 மற்றும் 2009 ஆம் ஆண்டு இடைவெளியில் 128 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். மேலும், 1992 முதல் 2007 வரையில் தொடர்ச்சியாக ஐந்து முறை உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்டு அவர் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Umpire Steve Buckner has expressed regret for giving out former Indian cricketer Sachin Tendulkar by mistake.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.