முன்னாள் வீரர் அஸ்வின் பயிற்சியாளர் பிடாக் எனும் பிரசன்னாவின் உரையாடலில் வெளிப்பட்ட சர்ச்சையான கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் துரந்தராக வேலைப் பார்த்தது யார் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் தீயாகப் பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்?
இந்நிலையில் பிடாக் அஸ்வின் உடனான யூடியூப்பில் பேசியிருப்பதாவது:
மார்க்ரம் முதல் ஓவர் வீசுகிறார். டாஸ் வென்று பேட்டிங்கே விளையாடாத தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் விளையாடுகிறார்கள். அப்படியென்றால் தளபதி விஜய் சொல்வதுபோல இதைச் சொல்லிக்கொடுத்தவன் உள்ளேயே ஒருத்தனாகவும் இருக்கலாம் அல்லது இந்தியாவில் இருக்கும் ஒருத்தனே உனக்கு ஆப்பு வைத்தாகவும் இருக்கலாம் என்பார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அஸ்வின், “டேய் என்ன சொல்ற நீ?” என்பார். அதற்கு பிடாக், “நான் சொல்லி முத்துவிட்டேன். புரிந்துகொண்டவன் பிஸ்தா” என்பார்.
பின்னர், அக்ஷர் படேல் தேர்வு செய்யாததும் வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு குறித்தும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை எடுத்த விதம் குறித்தும் பேசினார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பிரசன்னா யாரைக் குறிப்பிடுகிறார்?
இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தெறி படத்தில் இடைவேளைக் காட்சியில் வரும் வசனம் போல பிடாக் பேசியதால் அது ஒருவேளை அவரைப் பற்றிய பேச்சா என்றே தெரியாமல் அஸ்வின் குழம்பினார். அஸ்வின் மட்டுமல்லாமல், சமூக ஊடங்களே இது குறித்து பேசி வருகிறது.
சமீபத்தில் துரந்தர் எனும் படத்தில் ரன்வீர் பாகிஸ்தானுக்கு ஒற்றனாகச் சென்றிருப்பார். அதனால், தென்னாப்பிரிக்க அணிக்காக வேலைப் பார்த்தது யார்? இந்திய வீரர்களின் பலவீனங்களை யார் கூறியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Dhurandhar PDogg வà¯à®°à¯à®à®¿à®©à¯ ð¤£ð¤£ð¤£ pic.twitter.com/6WeTHBmNKd
— Thiru (@Thiru_1990) February 23, 2026
Summary
Who is the SA Dhurandhar? Pdogg prasanna video viral on social media south africa hreatest won
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 100 கோடி கொடுத்தாலும் இனி இதைச் செய்ய மாட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி

பதின் வயதினர் இரவு நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் பிரிட்டன்!

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




