வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

அஸ்வின் - பிரசன்னா உரையாடலில் வெளிப்பட்ட சர்ச்சையான கருத்து குறித்து...

News image
மோர்கல், துரந்தர், பிரசன்னா. - படங்கள்: பிடிஐ, ஜியோ ஸ்டூடியோஸ், அஸ்வின் யூடியூப்.
Updated On :24 பிப்ரவரி 2026, 10:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் வீரர் அஸ்வின் பயிற்சியாளர் பிடாக் எனும் பிரசன்னாவின் உரையாடலில் வெளிப்பட்ட சர்ச்சையான கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் துரந்தராக வேலைப் பார்த்தது யார் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் தீயாகப் பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்?

இந்நிலையில் பிடாக் அஸ்வின் உடனான யூடியூப்பில் பேசியிருப்பதாவது:

மார்க்ரம் முதல் ஓவர் வீசுகிறார். டாஸ் வென்று பேட்டிங்கே விளையாடாத தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் விளையாடுகிறார்கள். அப்படியென்றால் தளபதி விஜய் சொல்வதுபோல இதைச் சொல்லிக்கொடுத்தவன் உள்ளேயே ஒருத்தனாகவும் இருக்கலாம் அல்லது இந்தியாவில் இருக்கும் ஒருத்தனே உனக்கு ஆப்பு வைத்தாகவும் இருக்கலாம் என்பார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அஸ்வின், “டேய் என்ன சொல்ற நீ?” என்பார். அதற்கு பிடாக், “நான் சொல்லி முத்துவிட்டேன். புரிந்துகொண்டவன் பிஸ்தா” என்பார்.

பின்னர், அக்‌ஷர் படேல் தேர்வு செய்யாததும் வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு குறித்தும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை எடுத்த விதம் குறித்தும் பேசினார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பிரசன்னா யாரைக் குறிப்பிடுகிறார்?

இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தெறி படத்தில் இடைவேளைக் காட்சியில் வரும் வசனம் போல பிடாக் பேசியதால் அது ஒருவேளை அவரைப் பற்றிய பேச்சா என்றே தெரியாமல் அஸ்வின் குழம்பினார். அஸ்வின் மட்டுமல்லாமல், சமூக ஊடங்களே இது குறித்து பேசி வருகிறது.

சமீபத்தில் துரந்தர் எனும் படத்தில் ரன்வீர் பாகிஸ்தானுக்கு ஒற்றனாகச் சென்றிருப்பார். அதனால், தென்னாப்பிரிக்க அணிக்காக வேலைப் பார்த்தது யார்? இந்திய வீரர்களின் பலவீனங்களை யார் கூறியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.