டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

முதல்முறையாக காம்டன் - மில்லர் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க்!

ஆஷஸ் தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க் குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மிட்செல் ஸ்டார்க். - படம்: ஏபி

Updated On :8 ஜனவரி 2026, 11:15 am IST

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரின் தொடர் நாயகன் விருது வென்றார்.

காம்டன் - மில்லர் எனப்படும் இந்த விருதினை மிட்செல் ஸ்டார்க் முதல் முறையாக வென்றுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பான இங்கிலாந்தின் டேனிஸ் காம்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் கெயித் மில்லர் இருவரின் பெயரையும் இணைத்து ஆஷஸ் தொடரின் தொடர் நாயகன் விருது 2005 முதல் வழங்கப்படுகிறது.

ஆஷஸ் 2025-26 தொடரினை ஆஸ்திரேலியா 4- 1 என வென்றது. இந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 156 ரன்கள் எடுத்து அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

இதன்மூலம், தொடரில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் ஸ்டார்க்கிற்கு முதல்முறையாக காம்டன் - மில்லர் விருது வழங்கப்பட்டது.

இதுவரை காம்டன் - மில்லர் விருது வென்றவர்கள்...

2025 - 26 : மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)

2021-22 : டிராவிஸ் ஹெட் (ஆஸி.)

2017–18 : ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.)

2015 : ஜோ ரூட் (இங்கிலாந்து)

2013–14 : மிட்செல் ஜான்சன் (ஆஸி.)

2005 : ஆண்ட்ரூ ப்ளின்டாஃப் (இங்கிலாந்து)

Summary

Australian fast bowler Mitchell Starc won the Player of the Series award in the Ashes series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.