ஷுப்மன் கில்லின் அதிரடி அரைசதம் காரணமாக குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் நடப்பு சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட், ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் வேட் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
அடுத்த வந்த விஜய் சங்கரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் கடந்தார். பாண்டியா 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கில்லும் ஆட்டமிழந்தார். அவர், 46 பந்துகளைச் சந்தித்து 84 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க- ஐபிஎல்: மும்பை அணிக்கு 2ஆவது தோல்லி
இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. டேவிட் மில்லர் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தில்லி அணியில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.