திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஆர்சிபி அணி புதிதாகத் தேர்வு செய்த வீரர்

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 11:05 am IST

ஆர்சிபி அணியைச் சேர்ந்த லவ்நித் சிசோடியா காயம் காரணமாக விலகியதையடுத்து புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த 22 வயது லவ்நித் சிசோடியாவை ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மாற்று விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிசோடியா 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக லவ்நித் சிசோடியா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ரஜத் படிதார் ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஜத் படிதார், மத்தியப் பிரதேச அணிக்காக 31 டி20 ஆட்டங்களில் விளையாடி 7 அரை சதங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ஆர்சிபி அணியில் நான்கு வருடங்கள் இடம்பெற்றுள்ளார். இப்போது ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.