குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நடு ஓவர்களில் சொதப்பும் சிஎஸ்கே, அசத்தும் ராஜஸ்தான்!

இந்த வருடம் நடு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்திருப்பது பயமறியா ராஜஸ்தான் அணி தான்

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 3:51 pm IST

ஐபிஎல் 2022 போட்டி 2-வது வாரத்தை எதிர்கொண்டுள்ளது. முதல் வாரத்தில் ஐபிஎல் அணிகள் தங்கள் பேட்டிங்கை எப்படி வடிவமைத்துள்ளன என்று பார்த்தால் சில ஆச்சர்யங்கள் தென்படுகின்றன. 

பவர்பிளேவுக்குப் பிறகு வரும் நடு ஓவர்களில் (7-16) இந்தமுறை அதிக ரன்கள் கிடைத்து வருகின்றன. கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் உத்திக்குப் பதிலாக நடு ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடும் பக்குவத்தை அணிகள் அடைந்துள்ளன. 

இந்தமுறை 7 முதல் 16 ஓவர்களில் சராசரியாக ஒரு ஓவருக்கு 8.25 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2018-ல் 8.12 என நடு ஓவர்களில் சராசரி இருந்தது. வட்டத்துக்கு வெளியே 5 பேர் இருந்தாலும் அணிகள் அதிக ரன்கள் எடுக்கத் தயங்குவதில்லை. 

இந்த வருடம் நடு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்திருப்பது பயமறியா ராஜஸ்தான் அணி தான். நடு ஓவர்களில் ஒரு ஓவருக்கு 10.05 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி (9.10), லக்னெள (9.10) அடுத்த இடங்களில் உள்ளன. 

நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்காததால் தான் சிஎஸ்கே அணி, இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ளது. தொடர்ச்சியாக மூன்று தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளது. சிஎஸ்கே, நடு ஓவர்களில் ஒரு ஓவருக்கு 7.16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

ஐபிஎல் 2022: நடு ஓவர்களில் அதிக ரன்ரேட்டைக் கொண்டுள்ள அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் - 10.05
ஆர்சிபி - 9.10
லக்னெள - 9.10
தில்லி - 9.10
குஜராத் - 8.05
மும்பை - 7.85
சன்ரைசர்ஸ் - 7.80
கேகேஆர் - 7.71
பஞ்சாப் - 7.36

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.