சிஎஸ்கேவுக்கு மேலும் பின்னடைவு: மொயீன் அலிக்குக் காயம்

பயிற்சியின்போது அவருடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் சிஎஸ்கேவின் அடுத்தச் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார்...
சிஎஸ்கேவுக்கு மேலும் பின்னடைவு: மொயீன் அலிக்குக் காயம்

சிஎஸ்கே வீரர் மொயீன் அலிக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தச் சில ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 2-ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆல்ரவுண்டர் மொயீன் அலிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது அவருடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் சிஎஸ்கேவின் அடுத்தச் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக சிஎஸ்கே அணியைச் சேர்ந்த தீபக் சஹார், ஆடம் மில்ன் ஆகியோர் ஏற்கெனவே போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். தற்போது மொயீன் அலியும் சில ஆட்டங்களில் விளையாட முடியாமல் இருப்பது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

ஏலத்துக்கு முன்பு மொயீன் அலியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்தது சிஎஸ்கே. ஆனால் 5 ஆட்டங்களில் விளையாடி அதிகபட்சமாக 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மொயீன் அலி. 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் சிஎஸ்கே அணி நெருக்கடிக்கு ஆளாகியது. சுழற்பந்துவீச்சில் இதுவரை ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் தான் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் சான்ட்னரைத் தேர்வு செய்தது சிஎஸ்கே. 

சிஎஸ்கே அணி மே 1 அன்று சன்ரைசர்ஸுக்கு எதிராக புணே நகரில் விளையாடவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com