நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் இவர்தான்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கு கங்குலி பாராட்டு

நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் என உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image

கங்குலி

Updated On :30 ஏப்ரல் 2022, 5:05 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் பலர் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் மூன்று சதங்களை விளாசியுள்ளார். கே.எல். ராகுலும் சிறப்பாக பேட்டிங் ஆடியுள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை, குல்தீப் யாதவும் சஹலும் கலக்கிவருகின்றனர். 

இந்நிலையில், வளர்ந்துவரும் இளம் வீரர்தான் இந்த தொடரின் முகமாக உள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகபந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், நிலையாக 150 கி.மீ வேகத்திற்கு பந்து வீச வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவரை கங்குலி வெகுவாக பாராட்டியுள்ளார்.

மாலிக் குறித்து கங்குலி பேசுகையில், "இது மிகவும் சுவாரஸ்யமானது. நான் ஐபிஎல் போட்டிகளை பார்த்துவருகிறேன். எந்த அணியும் வெற்றி பெறலாம். அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள். இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் சிறப்பாக ஆடிவருகின்றன. 

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. உமேஷ் யாதவ், கலீல் அகமதும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில், உம்ரான் மாலிக்தான் தொடரின் முகமாக இருந்துவருகிறார் என்று கூறுவேன்" என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில், உம்ரான் மாலிக் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்களை விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த போட்டியில், குஜராத் அணி வெற்றிபெற்றபோதிலும், ஆட்ட நாயகன் விருது உம்ரானுக்கே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.