இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரோஹித் சர்மா இன்று (சனிக்கிழமை) தனது 36-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், அஜின்க்யா ரஹானே, தினேஷ் கார்த்திக், யுவ்ராஜ் சிங் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் சமூக ஊடகப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட்டில் 2007-இல் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 400 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 2007-இல் டி20 உலகக் கோப்பை மற்றும் 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத் தந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார்.
2019 உலகக் கோப்பையில் பேட்டிங் சராசரி 81 உடன் 648 ரன்கள் விளாசினார் ரோஹித் சர்மா. ஆனால், இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது.
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராமில் ஒருமுறை உரையாடிய ரோஹித் சர்மா, "அடுத்தடுத்து 3 உலகக் கோப்பைகள் உள்ளன. அதனால், நமக்கு (இந்திய அணி) வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். இரண்டு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை உள்ளன. நான் நிறைய முறை கூறியிருக்கிறேன். இதில் குறைந்தபட்சம் இரண்டு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும்" என்றார்.
இந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை உள்ளது. ரோஹித் சர்மா தற்போது கேப்டனாகவும் உள்ளார். அவரது விருப்பங்கள் சாத்தியமாகட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

மகள் உயிரிழந்த சோகத்தில் தந்தை தற்கொலை
உயர்கல்விக்கும் முன்னுரிமை

அமைச்சரவையில் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



