நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 12:51 pm IST


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரோஹித் சர்மா இன்று (சனிக்கிழமை) தனது 36-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், அஜின்க்யா ரஹானே, தினேஷ் கார்த்திக், யுவ்ராஜ் சிங் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் சமூக ஊடகப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டில் 2007-இல் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 400 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 2007-இல் டி20 உலகக் கோப்பை மற்றும் 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத் தந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார்.

2019 உலகக் கோப்பையில் பேட்டிங் சராசரி 81 உடன் 648 ரன்கள் விளாசினார் ரோஹித் சர்மா. ஆனால், இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. 

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராமில் ஒருமுறை உரையாடிய ரோஹித் சர்மா, "அடுத்தடுத்து 3 உலகக் கோப்பைகள் உள்ளன. அதனால், நமக்கு (இந்திய அணி) வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். இரண்டு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை உள்ளன. நான் நிறைய முறை கூறியிருக்கிறேன். இதில் குறைந்தபட்சம் இரண்டு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும்" என்றார்.

இந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை உள்ளது. ரோஹித் சர்மா தற்போது கேப்டனாகவும் உள்ளார். அவரது விருப்பங்கள் சாத்தியமாகட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.