ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?
டெல்லியில் ரிபல் படேல், கலீல் அகமது ஆகியோருக்குப் பதிலாக லலித் யாதவ் மற்றும் சேத்தன் சகாரியா சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணியில் ஷிம்ரோன் ஹெத்மயருக்குப் பதில் ரசி வாண்டர் டுசன் சேர்க்கப்பட்டுள்ளார்.