சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க | சிஎஸ்கேவை விட்டுப் பிரிகிறாரா ஜடேஜா?: காசி விஸ்வநாதன் பதில்
மும்பையில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைரன் பொலார்ட், முருகன் அஸ்வின் ஆகியோருக்குப் பதில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரித்திக் ஷோகீன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.